நான் படித்த முதல் ரமணிச்சந்திரன் நாவல் உறங்காத கண்கள்(தீப ஒளி). முழுக்க முழுக்க என்னை கட்டி போட்டு விட்டது. என்னிடம் இருந்த புத்தகத்தில் முடிவு இல்லை. ஆனால் அந்த புத்தகத்தை ஒரு நூறு தடவையாவது படித்து இருப்பேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. பின் ரமணிச்சந்திரன் புத்தகத்தை தேட ஆரமபித்தேன். என் உறவினரால் வழி காட்டப்பட்டு நந்தினி புக்கை (ரமணிச்சந்திரன் புக்கை வெளியிடும் மாத இதழ்) கடையில் மற்றும் பழைய புக் கடையில் தேடி கிடைக்க பெற்றேன். இது தான் நான் ரமணிச்சந்திரன் புக் படிக்க ஆரம்பித்த கதை.நீங்களும் உங்கள் முதல் ரமணிச்சந்திரன் நாவலை பகிர்ந்து கொள்ளலாம்.
ரமணிச்சந்திரன் நாவல்கள் ஒரு பார்வைr